5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப்பிலும் ஆம்ஆத்மி வெற்றி பெற்றது. 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்தத் தேர்தல் காங்கிரஸ் வரலாற்றில் ஒரு கருப்பு நிகழ்வாகும்.
படுதோல்வியை சந்தித்ததால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகளும் பரிதாபப்படும் நிலையில் இருந்து வருகிறது. மேலும், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல்தான் தங்களுக்கு கடைசி வாய்ப்பு என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். அதேவேளையில், பாஜகவுக்கு எதிராக அணி திரள வேண்டியதை இந்தத் தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாகவும் எதிர்கட்சியினர் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட தயார் என்று கூறி, காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது :- 5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம். நேர்மறையாக சிந்தியுங்கள். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லாதது. உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைத்துவிடவில்லை. சமாஜ்வாடி கட்சியை தோற்கடிக்க வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டது.
காங்கிரஸை நம்பி எதுவும் நடக்காது. அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மேலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவர்கள் என்னை ஒதுக்கினாலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அவர்களாவது ஒன்றாக இருக்கட்டும், எனக் கூறினார்.
ஏற்கனவே, தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதில் அக்கட்சி தோல்வியடைந்துவிட்டதாகவும், காங்கிரஸ் அல்லாத மாற்று தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இப்படியிருக்கையில், மம்தாவின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்குமா..? என்பது சந்தேகம்தான். அதேவேளையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை ஒதுக்குவதும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படும்.
இதனிடையே, படுதோல்வியால் நிலைகுலைந்து போயுள்ள சந்தர்ப்பந்தத்தை மம்தா பானர்ஜி பயன்படுத்திக் கொள்வதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கீழ் காங்கிரசை கொண்டு வர, இது அடித்தளமாக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.