நேர்மைக்கு கிடைத்த பரிசு… ஊர் சுற்றி காட்டிய ஆட்டோ ஓட்டுநரை காதலித்த பெல்ஜியம் பெண் : திருமணத்தில் இணைந்த பந்தம்!!

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டு இளம்பெண், தன்னை அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் மீது காதல் கொண்டு, அவரையே திருமணமும் முடித்து இருக்கிறார்.

கர்நாடகாவின் ஹம்பி பகுதியில் தான் இந்த சுவாரசிய சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இது குறித்த விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஹம்பி பகுதியை சேர்ந்தவர் அனந்தராஜ்.

ஆட்டோ டிரைவராக இருக்கும் அனந்தராஜ், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வழிகாட்டி கைட் ஆகவும் இருக்கிறார். ஹம்பிக்கு சுற்றுலா வரும் பயணிகளை தனது ஆட்டோவில் அழைத்து சென்று அந்த இடத்தின் தகவல்கள் குறித்து தெரிவித்து வந்தார். அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக பெல்ஜியம் நாட்டை சேர்ந்த கெமில் என்பவர் தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு சுற்றுலா வருகை தந்திருந்தார்.

அப்போது கெமில் குடும்பத்தினரை ஆட்டோ டிரைவரான அனந்தராஜ் தான் சுற்றுலாவுக்காக தனது ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். இதில் அனந்தராஜ் கெமில் குடும்பத்தினரிடம் ஹம்பி பற்றிய தகவல்களை மிக சுவாரசியமாக அவர்களுக்கு புரியும் படி கூறி இருக்கிறார்.

இதனால் கெமில் குடும்பத்தினருக்கு அனந்தராஜை பிடித்துள்ளது. இதேபோல் கெமிலுக்கும் அனந்தராஜை பிடித்துள்ளது. இதையடுத்து ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசியுள்ளனர்.

செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். இந்த பேச்சு நாளடைவில் காதலாக மலர்ந்தது. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக அனந்தராஜ் கெமிலின் குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார். அவர்களும் அனந்தராஜ் – கெமில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்து முறைப்படி திருமணம் நடக்க இருவீட்டாரும் அனுமதி அளித்தனர். அதன்படி கடந்த 23-ஆம் தேதி அனந்தராஜ் கெமில் நிச்சயதார்த்தம் நடந்தது.

தொடர்ந்து 25 ஆம் தேதியான நேற்று இவர்களது திருமணம் இந்து முறைப்படி கோவிலில் நடந்தது. ஹம்பியில் உள்ள விருபாக்‌ஷபா கோவிலில் வைத்து கெமிலுக்கு அனந்தராஜ் தாலி கட்டினார்.

பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பலரும் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்த அனந்தராஜுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

13 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

58 minutes ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

59 minutes ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

2 hours ago

ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…

2 hours ago

படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…

2 hours ago

This website uses cookies.