மேம்பாலத்தில் நின்று ஒருவர் பணத்தை தூக்கி வீசுவதை வாகன ஓட்டிகள் போட்டி போட்டு அள்ளிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள கேஆர் மார்க்கெட் பகுதியின் மேம்பாலத்தில் பைக்கில் வந்த கோட்சூட் போட்ட இளைஞர் ஒருவர், தனது பையில் கொண்டு வந்த ரூபாய் நோட்டுக்களை தூக்கி கீழே வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, பணத்தை போட்டி போட்டு அள்ளினர்.
திரைப்படங்களில் வரும் காட்சி போல் இருந்த இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் அந்த நபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்தப் பகுதியில் அந்த நபர் தப்பியோடிவிட்டார்.
அந்த நபர் சுமார் ரூ.3000 வரை வாரி இறைத்திருக்கலாம் என்றும், திரைப்பட ஷூட்டிங்கிற்காக இதுபோன்று செய்யப்பட்டதாகவும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.