ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் என்ஜினியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பணமும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பீகாரின் கிஷன்கன்ஜ் டிவிசனில் நிர்வாக பொறியாளராக இருப்பவர் சஞ்சய் குமார் ராய். இளநிலை பொறியாளரான இவர், அலுவலகத்தில் உள்ள காசாளர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்ற நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாட்னாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள கட்டுகட்டான பணமும், நகைகளும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு, பல சொத்து ஆவணங்களும் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். பணத்தை எண்ணுவதற்காக ரூபாய் நோட்டுகளை எண்ணும் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சஞ்சய் குமார் ராய் தொடர்புடைய வீடுகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் ரூ.4 கோடி ரொக்கம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.