குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சந்தித்து பேசினார். குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
மரியாதை நிமித்தமாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியதாக ராஷ்டிரபதி பவன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் நாளை குடியரசுத்தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவரிடம் மனு அளிக்க உள்ளன.
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்து முறையிடவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முன்னதாக மணிப்பூருக்கு, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் எம்பிக்கள் நேரடியாகவே சென்றனர்.
மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக 21 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து நேரடியாக கள நிலவரத்தை அறிந்து கொண்டது.
அதன்பிறகு குடியரசுத்தலைவரை சந்தித்து மனு அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அதன்படி நாளை சந்திக்க திட்டமிட்டு இருக்கும் நிலையில், இன்று அமித்ஷா குடியரசுத்தலைவரை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.