வாக்குச்சாவடியை கைப்பற்றிய பாஜக பிரமுகரின் மகன்.. ஷாக் வீடியோ : நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?!
குஜராத் மாநிலத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.
குஜராத்தில் உள்ள தாஹோத் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக ஜஸ்வந்த்சிங் பாபோர் உள்ளார். இந்நிலையில், தாஹோத் மக்களவைத் தொகுதியில் உள்ள பார்த்தம்பூர் கிராமத்தின் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அத்தொகுதியின் பாஜக எம்.பியின் மகன் விஜய் பாபோர் கைப்பற்றினார்.
அது சம்பந்தமான வீடியோவை சமூக வலைத்தளங்களில் அவர் நேரடியாக ஒளிபரப்பினார். பின்பு விஜய் பாபோர் அந்த வீடியோவை நீக்கினார். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது, தஹோத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரபாபென் தாவியாட் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் விசாரணையை தொடங்கியுள்ளனர். தேர்தல் ஆணைய தரவுகளின்படி, தாஹோத் தொகுதியில் 58.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.