ஆளும் கட்சி சட்ட மேலவை உறுப்பினர் காரில் முன்னாள் கார் ஓட்டுனர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் அனந்தபாபு. ஆனந்தபாபு ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர் (MLC) ஆவார்.
அவரிடம் சுப்பிரமணியம் என்பவர் இதற்கு முன்னர் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்ற எம்.எல்.சி ஆனந்தபாபு சுப்பிரமணியத்தை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார்.
நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் சுப்ரமணியம் வீட்டிற்கு வந்த எம்.எல்.சி அனந்தபாபு சாப்பிடுவதற்காக டிபன் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு சுப்பிரமணியம் இறந்துவிட்டார் என்று கூறி தன்னுடைய காரில் இருந்த சுப்பிரமணியம் உடலை அவருடைய குடும்பத்தாருக்கு காண்பித்தார்.
இதனால் சந்தேகமடைந்த சுப்பிரமணியம் உறவினர்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்ற எம்.எல்.சி ஆனந்தபாபு தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
20 ஆயிரம் ரூபாயை எம்.எல்.சி ஆனந்த்பாபுவிடம் இருந்து சுப்பிரமணியம் கடனாக பெற்றதை அடுத்து கடனை திருப்பி செலுத்த கோரி ஆனந்த் பாபு தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் காரில் அழைத்துச் சென்று கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தபாபுவை தேடி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.