காதலனுக்கு திருமணம் நடப்பதை அறிந்து மண்டபத்துக்கு சென்ற காதலியை செருப்பால் அடித்து விரட்டிய மணமகனின் உறவினர்களின் வீடியோ இணையத்தில் ரைவலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் கம்பம் நகரில் உள்ள பைபாஸ் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஸ்ரீநாத் என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண முகூர்த்தத்திற்கு சற்று நேரத்திற்கு முன் அங்கு வந்து சேர்ந்த அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ரஜினி திடீரென்று திருமண மண்டபம் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் என்னை விரட்டி விரட்டி காதலித்த ஸ்ரீநாத் இப்போது வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.
இதனால் ஆவேசமடைந்த மணமகனின் உறவுப் பெண்கள் ரஜினியின் முடியை பிடித்து தரதரவென்று இழுத்து வெளியில் தள்ளினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஒருவர் நடந்த சம்பவத்தை வேடிக்கை கூட பார்க்காமல் தன்னுடைய செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீநாத்க்கு நிச்சயக்கப்பட்ட முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இதுபற்றி ரஜினி அளித்த புகாரின் பேரில் கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.