சிமோகா: வீட்டில் ஒருநாள் தங்க கூடாது என ஜோதிடர் கூறியதை கேட்டு குடும்பத்தினர் வெளியே தங்கிய போது சுமார் ரூபாய் 3.46 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிமோகா நவுலே ஜோதி நகரை சேர்ந்த ருத்ரேஷ். இவரின் அண்ணன் வேதாந்தா சமீபத்தில் இறந்து போயிருந்தார். இந்நிலையில் இவர் வீட்டில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.
அப்போது, ஜோதிடர் ஒருவர் சாவு கண்ட வீட்டில் ஒருநாள் யாரும் இருக்கக்கூடாது, அப்படி இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆகாது என கூறியுள்ளார். இதனால் ருத்ரேஷ் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் ஏப்ரல் 9ம் தேதி இரவு தனியார் தங்கும் விடுதியிலும் சொந்தகாரர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இதனால் அன்று வீட்டில் யாரும் இல்லாததை கவனித்த திருடர்கள் வீட்டினுள் நுழைந்து பீரோவில் இருந்த 60 கிராம் தங்க நகைகளையும், ரூபாய் 10 ஆயிரம் திருடிச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது திருடு போயிருப்பதை கண்டு ருத்ரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஷிமோகா ஜெயநகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.