ஆந்திரா : ஆந்திராவில் பெட்ரோல் டேங்கர் லாரியில் மறைத்து கடத்தப்பட்ட 2 டன் கஞ்சாடிவை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை ஒட்டியிருக்கும் மலைக்கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான அளவில் ஏக்கர் அளவில் கஞ்சா சட்டவிரோத சாகுபடி ஜோராக நடைபெற்று வருகிறது. அங்கிருந்து இந்தியா முழுவதும் கஞ்சா சப்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீவிர முடிவில் இருக்கும் சில மாநிலங்கள் இது தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. எனவே மலை பகுதிகள், அடர்ந்த வனப் பகுதிகள் ஆகியவற்றில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களை கண்டுபிடித்து அவற்றை அழித்து ஒழிக்கும் பணியில் ஆந்திர போலீசார் ஈடுபட்டனர்.
அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் கஞ்சா தோட்டங்களை கண்டுபிடிப்பதற்காக ட்ரோன்களையும் ஆந்திர போலீசார் பயன்படுத்தினர். இதன்மூலம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டங்கள் அழிக்கப்பட்டன. ஆனாலும் இன்னும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் கஞ்சாவை விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து இந்தியா முழுவதும் சப்ளை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்றை சிங்கவரப்புகோட்டை அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவர் மற்றும் அதிலிருந்த மற்றொருவர் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஜயநகரம் மாவட்டத்திலிருந்து ஹைதராபாத்திற்கு கஞ்சா கடத்தல் நடைபெற்றது தெரியவந்துள்ளது.இதனை அடுத்து அதிலிருந்த சுமார் 2000 கிலோ (2 டன்) எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.