திருப்பதி : அனந்தபுரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் திருமணத்துக்கு சென்று திரும்பிய 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி அருகே அனந்தபுரம் அருகே பல்லாரியை சேர்ந்த 9 பேர் உரவ கோட்டையில் நேற்று நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டபின் இரவு ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பல்லாரி பகுதியில் எதிர்திசையில் வந்த லாரி கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்தில் கார் முழுவதுமாக நசுங்கி அதில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
கார் மோசமான நிலையில் நசுங்கியதால் மரணம் அடைந்தவர்களின் உடல்களை மீட்பது சவாலான காரியமாக இருந்தது. எனவே போலீசார் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் காரை உடைத்து உடல்களை மீட்டனர்.
விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள ஆந்திர போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். மரணமடைந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.