புதிய ஊதிய உயர்வு உத்தரவுக்கு எதிர்ப்பு : விஜயவாடாவில் மாபெரும் பேரணி

ஆந்திர அரசு புதிதாக அறிவித்த அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அரசாணையை திரும்ப பெறக்கோரி விஜயவாடாவில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

ஆந்திர மாநில அரசு தன்னுடைய ஊழியர்களுக்கு சமிபத்தில் 24 சதவீத ஊதிய உயர்வு வழங்கி முடிவு செய்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அரசின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஊதிய உயர்வு அறிவித்த அரசு வீட்டு வாடகை படி உள்ளிட்ட பல்வேறு படிகளை குறைத்துள்ளது. எனவே ஊதிய உயர்வு தொடர்பான புதிய அரசாணையை ரத்து செய்து பழைய முறையிலேயே தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு நேற்று புதிய அரசாணை அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்தியது. எனவே வெகுண்டெழுந்த அரசு ஊழியர்கள் ஒன்றிணைத்து இன்று விஜயவாடாவில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

அரசு ஊழியர்கள் விஜயவாடா செல்லாமல் தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனாலும் ஊழியர்கள் போலீசார் விதித்த தடையை மீறி விஜயவாடாவில் திரண்டு இன்று மாபெரும் பேரணி நடத்தினர். அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர், அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் விஜயவாடாவில் திரண்டு அரசின் புதிய ஊதிய உயர்வு அரசாணைக்கு எதிராக நடத்திய மாபெரும் பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

KavinKumar

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

14 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

15 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

15 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

16 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

17 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

17 hours ago

This website uses cookies.