நாடாளுமன்ற தேர்தலில் தலைநகர் டெல்லியில் போட்டியிடும் ஆம்ஆத்மி – காங்கிரஸ் கட்சியினரிடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச் 9ம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஏப்ரல் மாதத்தின் 2வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல, பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் இண்டியா எனும் கூட்டணியை அமைத்து போட்டியிட திட்டமிட்டது.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியதும், இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு செய்வதில் பல்வேறு மாநில கட்சிகளுக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதனால், மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்தார். அதேபோல, பஞ்சாப்பில் மட்டும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம்ஆத்மி அறிவித்தது.
உத்தரபிரதேசத்தில் உள்ள 8 தொகுதிகளில் 17 ல் காங்கிரசும், 63ல் சமாஜ்வாதியும் போட்டியிட முடிவு செய்து பேச்சுவார்த்தையை இறுதி செய்து விட்டன.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் யார் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவதில் என்பதில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்து வந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 3 தொகுதிகளிலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
அதேபோல, ஹரியானாவில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிட இருப்பதாகவும், குஜராத்தில் 24 தொகுதிகளில் காங்கிரசும், 2 தொகுதியில் ஆம் ஆத்மியும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.