காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கட்சி அலுவலகம் வயநாடுவில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதனை அக்கட்சி உறுதி செய்து உள்ளது. இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து உள்ளது. அதில், கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்திருக்கும்போது, வெளியே இருந்து வந்த சிலர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சி டுவிட்டர் வழியே வெளியிட்ட செய்தியில், இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) அமைப்பின் கொடிகளை ஏந்தியபடி குண்டர்கள் வந்தனர். அவர்கள் ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தின் சுவர் மீது ஏறி, குதித்து உள்ளே வந்தனர். கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் நடந்துவருகிறது. இதனால் அடிக்கடி வன்முறையும் அங்கு வெடிக்கிறது. சமீபத்தில் அம்மாநில முதலமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தை நடத்தியது.
திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களுக்கு பதிலடியாக தற்போது வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தியின் அலுவலகத்தை இடது சாரி அமைப்பை சார்ந்தவர்கள் சூறையாடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.