இந்தியா

நாளை உருவாகிறது டானா புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு உள்ளதா?

வங்கக் கடலில் நாளை (அக்.23) உருவாகும் புயலுக்கு டானா (DANA) என பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 23ஆம் தேதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற இருக்கிறது. இதனையடுத்து புயல் உருவாகி, தமிழக கடற்கரை பகுதிகளில் இருந்து விலகி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்கிறது.

இவ்வாறு உருவாகும் இந்த புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த ‘டானா’ (DANA) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், அந்தமான் கடல் பரப்பில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அது வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இது நாளை புயலாக மாறி, நாளை மற்றும் நாளை மறுநாள் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவின் பாரதீப்பிற்கு தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 770 கிலோ மீட்டர் தொலைவிலும், வங்கதேசத்தின் கேபுபூராவிற்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 740 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு – வட மேற்கு நோக்கி நகர்ந்து நாளை டானா புயலாக மத்திய கிழக்கு வங்கக் கடலில் வலுப்பெறும். மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வடமேற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (அக்.24) காலை வலுப்பெறும். தொடர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையே நாளை மறுநாள் இரவு மற்றும் 25ஆம் தேதி அன்று காலையில் 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மாலை உயர்வு.. காலை குறைவு – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

இதனால் இரு மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இரு மாநிலப் பேரிடர் துறைகளை அந்தந்த மாநில அரசுகள் உஷார்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மாநில பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் படை உபகரணங்கள், களப் பணியாளர்கள் ஆகியோரும் தயார் நிலையில் உள்ளதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

9 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

11 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

11 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

12 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

12 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

13 hours ago

This website uses cookies.