டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள முண்ட்கா ரயில் நிலையம் அருகில் உள்ள 4 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டன.
இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கம்பெனி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடைய, பிரதமர், தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.
அந்தவகையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என தெரிவித்திருந்தார்.
மேலும், டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லி வணிக வளாகம் தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு சென்று முதல்வர் ஆய்வு செய்த பிறகு நிவாரணம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.