புதுடெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் இன்று திடீரென ஆலோசனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் இன்று திடீரென ஆலோசனை நடத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல், மனிஷ் திவாரி ஆகியோர் பங்கேற்றனர். ஆனந்த் சர்மாவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.
இன்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் 4 தலைவர்களும் ஏற்கனவே, கட்சித் தலைமைக்கு கூட்டாக கடிதம் எழுதியிருந்தவர்களின் முக்கியமானவர்கள் ஆவர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்ய வேண்டும் முழு நேர தலைவரை கட்சிக்கு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சோனியா காந்திக்கு 23 மூத்த தலைவர்கள் அனுப்பியிருந்தனர். இதில், மேற்கூறிய 4 பேரும் முக்கியமானவர்கள் ஆவர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.