முறைகேடு வழக்கில் அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளும் கட்சி எம்பி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கையை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்தார். அதன்படி, மதுபாட்டில்களின் சில்லறை விற்பனையை தனியாரிடம் வழங்குவதுதான். இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என மாநில அரசு கூறியது.
இந்த புதிய கொள்கையை அமல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. டெல்லி தலைமை செயலரின் பரிந்துரையின் பேரில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கெ. சக்ஸேனா, சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் சிபிஐயுடன் அமலாக்கத்துறையும் இணைந்து விசாரணையை தொடங்கியது. அதில், துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா கைதாகி, சிறையில் உள்ளார்.
இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்குடன், இணைக்கப்பட்ட பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதை அறிந்து, அவரது வீட்டு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன்,
சஞ்சய் சிங் அமலாக்க இயக்குநரக அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
முறைகேடு வழக்கில் துணை முதலமைச்சர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆளும்கட்சியின் எம்பியும் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.