கோவா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பாஜக ஆட்சிதான் என்று முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவின.
இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளில் தற்போது வரை யாரும் பெரும்பான்மையை எட்டவில்லை.
ஆட்சியைப் பிடிக்க 21 இடங்கள் என்ற நிலையில், பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், ஆம்ஆத்மி 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. சுயேட்சை மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்த் கட்சி உள்ளிட்ட கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் உத்பல் பாரிக்கர் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், கோவாவில் பாஜக ஆட்சி அமைவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா கோமந்த் கட்சி மற்றும் சுயேட்சைகளின் கூட்டணியுடன் ஆட்சி அமைப்பதாகவும் அவர் கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.