‘சூடித் தந்த சுடர்கொடியாள்’.. திருப்பதி ஏழுமலையானுக்காக ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இருந்து வந்த பச்சைக்கிளி!!

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் கருட வாகன சேவை அன்று உற்சவருக்கும் மூலவருக்கும் அலங்கரிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகளை திருப்பதி மலைக்கு கொண்டு வருவது வழக்கம்.

ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகள் பின்னர் பெருமாளுக்கு அணிவிக்கப்படுவதால் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்கொளியாள் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

புராண காலத்தில் ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மாலைகள் பெருமாளுக்கு மீண்டும் சூடப்பட்டதை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் கருட வாகன சேவை நடைபெறும் அன்று ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்படும் மலர் மாலைகள் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

அந்த வகையில் நாளை திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் கருட வாகன சேவையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாளுக்கு சூடப்பட்ட மலர்மாலைகள், இலைகளால் தயார் செய்யப்பட்ட பச்சை கிளிகள், மலர் ஜடை,பட்டு வஸ்திரம், மங்களப் பொருட்கள் ஆகியவை திருப்பதி மலைக்கு கொண்டுவரப்பட்டன.

அவற்றை இணை ஆணையர்,சுதர்சன், செல்லதுரை நிர்வாக அதிகாரி, முத்துராஜா தக்கார், ரவிச்சந்திரன் ஸ்தலத்தார், ரமேஷ் பிரசன்ன வெங்கடேசன் சுதர்சன் ஆகியோர் ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஜீயர் மடத்தில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவில் மரியாதைகளுடன் ஊர்வலமாக கொண்டு சென்று ஜீயகளிடம் ஒப்படைத்தார்.

ஜீயர்கள் அவற்றை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர்மாலைகள் இன்று நடைபெற இருக்கும் கருட வாகன சேவையை முன்னிட்டு மூலவர் ஏழுமலையானுக்கும், கருட வாகன சேவையில் எழுந்தருள இருக்கும் உற்சவர் மலையப்ப சாமிக்கு அலங்கரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர் ஜடை, இலைகளால் தயார் செய்யப்பட்ட பச்சைக்கிளி ஆகியவை நாளை காலை திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் மோகினி அலங்கார ஊர்வலத்தில் உச்சவருக்கு அலங்கரிக்கப்படும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

1 hour ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

2 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

2 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

3 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

4 hours ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

5 hours ago

This website uses cookies.