கிரைண்டர், எல்இடி பல்ப்புகள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சண்டிகரில் கடந்த 2 நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கிரைண்டர், அரிசி அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5ல் இருந்து 18 சதவீதமாகவும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாகவும், எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சூரிய சக்தி ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி 5ல் இருந்து 12 சதவீதமாகவும், கத்தி, பேனா, பிளேடு , ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாகவும், மீத்தேன் மீதான ஜிஎஸ்டி 5ல் இருந்து 12 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது :- சூதாட்டம், லாட்டரி, ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம் உள்ளிட்டவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் நடக்கும். சரக்கு போக்குவரத்திற்கான வரியை குறைக்க கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது, எனக் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.