திருப்பதி : இரண்டு வீடுகளில் கொள்ளை போன 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் பறிமுதல் செய்த போலீசார் ஒருவனை கைது செய்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் உள்ள ஐராலா நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒரு வீட்டிலும், இந்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி ஒரு வீட்டிலும் இருந்த தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டன.
இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து திருப்பதி போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் இரண்டு வீடுகளிலும் கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது கொள்ளை போன இரண்டு வீடுகளுக்கும் நண்பனாக வந்து சென்றுகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் இரண்டு வீடுகளிலும் கொள்ளையடித்தது சுரேஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுரேஷை போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். பின்னர் அவனுடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 610 கிராம் தங்க ஆபரணங்கள், பதிமூன்று கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த நான் உடற்பயிற்சி கூடம் ஏற்பாடு செய்து அதன் மூலம் பிழைப்பு நடத்த முடிவு செய்தேன்.
அதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லாத காரணத்தால் கொள்ளை அடிக்கலாம் என்று முடிவு செய்து இரண்டு வீடுகளிலும் கொள்ளை அடித்தேன் என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.