ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள லிங்கப்பள்ளம் அருகே இடி விழுந்து நான்கு பேர் மரணம் அடைந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லிங்கப்பள்ளம் அருகே உள்ள விளைநிலம் ஒன்றில் விவசாய கூலி தொழிலாளர்கள் எட்டு பேர் நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் மீது மின்னல் தாக்கி நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மரணம் அடைந்தனர்.
மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஏலூரூ அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மரணமடைந்த நான்கு பேர் உடல்களும் ஏலூரூ அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.