மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஒருமாதம் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தும்படி பா.ஜ.க. தலைமை அக்கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்து முதல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
அதைத்தவிர தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக உள்துறை மந்திரி அமித்ஷா ஹெலிகாப்டரில் கந்தனேரிக்கு 8-ந்தேதி மாலை 3.30 மணி அளவில் வருகை தர உள்ளார். அதற்காக கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான தளம் அமைக்கப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசும் அமித்ஷா அங்கிருந்து 4.45 மணியளவில் ஹெலிகாப்டரில் விசாகப்பட்டணம் செல்கிறார்.
மற்றொரு மத்திய அமைச்சர் வி.கே.சிங் விமானம் மூலம் சென்னைக்கு வந்து அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வர உள்ளார்.
கந்தனேரியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை தமிழக பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர் நரேந்திரன், வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர்கள் ஜெகன்நாதன், பாபு ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று நேரில் பார்வையிட உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.