ஐதராபாத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணியில் பல்லி வால் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ஐதராபாத்தில் பிரபலமான மெரிடியன் உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருப்பதாக வெளியாகி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐதராபாத்தில் பிரபலமான மற்றொரு உணவகமான டெக்கான் எலைட் உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணியில் பல்லி வால் இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரியாணி ஆர்டர் செய்த வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலான நிலையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டெக்கான் எலைட் உணவகத்தில் ரெய்டு நடத்தினர். அப்போது, பிரியாணியின் மாதிரியை ஆய்வகத்தில் ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.
இதனிடையே, இந்தப் பிரியாணியை சாப்பிட்ட 8 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வீடியோ வைரலான நிலையில், அது பல்லியின் வால் இல்லை என்றும், அது ஒருவகையான மீன் என்று ஓட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.