கொல்கத்தா: ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைதான முன்னாள் மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பட்டியலின மாணவி 2017 முதல் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பை படித்து வருகிறார். இவர் தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி தனது துறைப் பேராசிரியரிடம் புகாரளிக்க, சாதியரீதியாக அந்தப் பெண்ணை இழிவுபடுத்தி இந்தப் பிரச்னையை அவர் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேசிய மகளிர் ஆணையத்திடமும், தமிழக காவல்துறையிடமும் அந்த மாணவி புகார் அனுப்பினார்.
இதையடுத்து, அந்த புகாரின் அடைப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, ஓராண்டுக்கு பின்னர் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாக, ஐஐடி முன்னாள் மாணவர் கிங்ஷூக் தேவ் சர்மாவை (30), கொல்கத்தாவில் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
டைமண்ட் ஹார்பர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்குவரத்து வாரண்ட் பெற்ற பின் அவரை சென்னை அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கிங்ஷூக் தேவ் சர்மா ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றிருந்ததால் அவரை அங்குள்ள நீதிமன்றம் விடுவித்துள்ளது.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.