கீவ்: உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் இன்று காலை நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை கொத்துக் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதுகுறித்து வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, இந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹவேரி சாலகிரியை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் விடுதியில் இருந்து ரயில் நிலையத்திற்கு சென்றபோது இந்த தாக்குதலில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன் சேகரப்பா கார்கிவ் நகரில் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். மாணவர் உயிரிழந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.