‘பதஞ்சலி’ மருந்துகளுக்கு தடையா? காங்கிரஸ் எம்பி அளித்த புகார் : ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு!!

யோகா குருவும், பாஜகவின் அனுதாபியாகவும் அறியப்படும் பாபா ராம்தேவ் சார்பில் தொடங்கப்பட்டது பதஞ்சலி நிறுவனம்.

பல்வேறு நோய்களுக்கான லேகியம், டானிக் போன்ற மருந்துகளையும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்களையும் பதஞ்சலி தயாரித்து விற்பனை செய்தது .

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிந்தைய காலக்கட்டங்களில் நாடு முழுவதும் இயற்கை உணவுகள் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் இயற்கை மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படுவதாக பதஞ்சலி பெரிய அளவில் விளம்பரங்களை செய்தது.

இதனால் மக்களின் கவனம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது விழ ஆரம்பித்தது. அந்த சமயம், பல முன்னணி நிறுவனங்களை லாபத்தில் ஓரம்கட்ட தொடங்கியது பதஞ்சலி.

மேலம் பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் பல்வேறு நோய்களை தீர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. குறிப்பாக ‘மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954’க்கு புறம்பாக சில விளம்பரங்கள் உள்ளதாக கேரளாவை சேர்ந்த மருத்துவர் கே.வி. பாலு என்பவர் புகார் அளிததார்.

ஆனால் மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, சட்ட விதி 170 தொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மருத்துவர் பாலு இந்த விவகாரத்தை விடவில்லை, தான் சட்டம் 1954ஐ தான் குறிப்பிட்டேனே தவிர சட்ட விதி 170ஐ தான் குறிப்பிடவே இல்லை என கூறியிருந்தார்.

ஆனால் மருத்துவரின் புகார் குறித்து ஆயுஷ் அமைச்சகம் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது மருத்துவர் பாலு அளித்த புகாரை போலவே ஒரு புகார் மனு அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954ஐ மீறிய பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தகண்ட் அரசின் உரிமம் வழங்கும் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது

இதனால் மீண்டும் பதஞ்சலி நிறுவனத்தின் மீதான புகார் தூசு தட்டப்பட்டுள்ளது. சட்ட மீறல் உறுதிப்படுத்தப்பட்டால் தடை செய்யப்படும் என கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.