யோகா குருவும், பாஜகவின் அனுதாபியாகவும் அறியப்படும் பாபா ராம்தேவ் சார்பில் தொடங்கப்பட்டது பதஞ்சலி நிறுவனம்.
பல்வேறு நோய்களுக்கான லேகியம், டானிக் போன்ற மருந்துகளையும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்களையும் பதஞ்சலி தயாரித்து விற்பனை செய்தது .
கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிந்தைய காலக்கட்டங்களில் நாடு முழுவதும் இயற்கை உணவுகள் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் இயற்கை மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படுவதாக பதஞ்சலி பெரிய அளவில் விளம்பரங்களை செய்தது.
இதனால் மக்களின் கவனம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது விழ ஆரம்பித்தது. அந்த சமயம், பல முன்னணி நிறுவனங்களை லாபத்தில் ஓரம்கட்ட தொடங்கியது பதஞ்சலி.
மேலம் பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் பல்வேறு நோய்களை தீர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. குறிப்பாக ‘மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954’க்கு புறம்பாக சில விளம்பரங்கள் உள்ளதாக கேரளாவை சேர்ந்த மருத்துவர் கே.வி. பாலு என்பவர் புகார் அளிததார்.
ஆனால் மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, சட்ட விதி 170 தொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மருத்துவர் பாலு இந்த விவகாரத்தை விடவில்லை, தான் சட்டம் 1954ஐ தான் குறிப்பிட்டேனே தவிர சட்ட விதி 170ஐ தான் குறிப்பிடவே இல்லை என கூறியிருந்தார்.
ஆனால் மருத்துவரின் புகார் குறித்து ஆயுஷ் அமைச்சகம் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது மருத்துவர் பாலு அளித்த புகாரை போலவே ஒரு புகார் மனு அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954ஐ மீறிய பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தகண்ட் அரசின் உரிமம் வழங்கும் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது
இதனால் மீண்டும் பதஞ்சலி நிறுவனத்தின் மீதான புகார் தூசு தட்டப்பட்டுள்ளது. சட்ட மீறல் உறுதிப்படுத்தப்பட்டால் தடை செய்யப்படும் என கூறப்படுகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.