சந்திராயன்-3 விண்கலம் நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. நிலவின் தென்துருவத்திற்கு அனுப்பப்படவுள்ள இந்த சந்திராயன்-3 விண்கலம் சுமார் 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3900 கிலோ எடை கொண்ட சந்திராயன்-3 விண்கலம் நாளை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதிகட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், நாளை செலுத்தப்பட உள்ள சந்திராயன்-3 விண்கலம் வெற்றியடைய வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சந்திராயன்-3 விண்கலத்தின் மாதிரியை சாமி சன்னதியில் வைத்து, இந்த ஏவுதல் வெற்றியடைய வேண்டி வழிபாடு செய்துள்ளனர். இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் நிலவில் விண்கலம் தரையிறக்கும் 4-வது நாடு நமது இந்தியா ஆகும். ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.