கர்நாடகாவில் ஹனுமன் கொடியை அகற்றியதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக – மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் 108 உயரத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டு, அதில் அனுமன் கொடியை ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கொடிக்கம்பத்தை அமைக்க கிராமப் பஞ்சாயத்து அனுமதியை வழங்கியது.
ஆனால், தேசியக்கொடிக்கு பதிலாக அனுமன் கொடியை ஏற்றியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அந்தக் கொடியை அகற்றுமாறு பஞ்சாயத்து நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இதையடுத்து, கொடியை அனுமன் கொடியை அகற்றுவதற்காக அதிகாரிகள் நேற்று சென்ற நிலையில், அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பாஜக, பஜ்ரங் தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்தனர்.
அப்போது, அங்கிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரவி குமாரின் பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பதற்றம் உருவாகிய நிலையில்,அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். பின்னர், அனுமன் கொடியை அகற்றி விட்டு தேசியக்கொடியை ஏற்றினர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்வரும் நாட்களில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கர்நாடகாவில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.