கர்நாடகாவில் ஹனுமன் கொடியை அகற்றியதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக – மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் 108 உயரத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டு, அதில் அனுமன் கொடியை ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கொடிக்கம்பத்தை அமைக்க கிராமப் பஞ்சாயத்து அனுமதியை வழங்கியது.
ஆனால், தேசியக்கொடிக்கு பதிலாக அனுமன் கொடியை ஏற்றியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அந்தக் கொடியை அகற்றுமாறு பஞ்சாயத்து நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இதையடுத்து, கொடியை அனுமன் கொடியை அகற்றுவதற்காக அதிகாரிகள் நேற்று சென்ற நிலையில், அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பாஜக, பஜ்ரங் தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்தனர்.
அப்போது, அங்கிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரவி குமாரின் பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பதற்றம் உருவாகிய நிலையில்,அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். பின்னர், அனுமன் கொடியை அகற்றி விட்டு தேசியக்கொடியை ஏற்றினர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்வரும் நாட்களில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கர்நாடகாவில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.