அரசின் கஜானா காலியாகிப் போனதாகவும், அமைச்சர்கள் பணத்தை கவனமாக செலவு செய்யுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே கேரள அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், அமைச்சர்களுக்கு தொகுதி மேம்பாட்டுக்கான நிதிகளை வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியிருக்கையில், பணப்பட்டுவாடா செய்யப்படாததால் பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஓணம் பண்டிகையொட்டி அரசின் செலவுகள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், வருவாய் குறைந்துள்ளதால் நிதி நெருக்கடி நிலவுவதாகக் கூறிய முதலமைச்சர் பினராயி விஜயன், பணத்தை கவனமாக செலவழிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மாநிலத்தின் கடன் வரம்பை மத்திய அரசு உயர்த்தாததே இந்த நிதி நெருக்கடிக்கு காரணம் என்றும், ஓணம் முடிந்ததும் கஜானா காலியாகிவிடும் என்று அமைச்சர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.