இந்தியா பெயரை மாற்றுவோம்.. பிடிக்கலைனா நாட்டை விட்டு வெளியேறுங்கள் : பாஜக மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!!

இந்தியா பெயரை மாற்றுவோம்.. பிடிக்கலைனா நாட்டை விட்டு வெளியேறுங்கள் : பாஜக மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!!

பாரத் பெயர் மாற்றம் குறித்து பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது விரைவில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படும் என்றும், கொல்கத்தாவில் உள்ள வெளிநாட்டவர்களின் சிலைகள் அகற்றப்படும் என்றும் திலீப் கோஷ் கூறியிருந்தார். நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிரானவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என என்றும் அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் மெதினிபூர் எம்.பியான திலீப் கோஷ் தனது தொகுதியில் கரக்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும், கொல்கத்தாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களின் சிலைகளையும் உடனடியாக அகற்றுவோம்..

இந்தியாவின் பெயர் நிச்சயமாக பாரத் என்று மாற்றப்படும். அதை விரும்பாதவர்கள் நாட்டை விட்டு தாராளமாக வெளியேறலாம்” என்று அவர் தெரிவித்தார். திலீப் கோஷின் இந்தக் கருத்துகள் இணையத்தில் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த மற்றொரு மூத்த பாஜக தலைவரான ராகுல் சின்ஹா, “ஒரு நாட்டிற்கு இரண்டு பெயர்கள் நிச்சயம் இருக்க முடியாது.. உலகத் தலைவர்கள் ஜி20 மாநாட்டில் பங்கேற்க டெல்லியில் இருக்கும் நிலையில், நாட்டின் பெயரை மாற்ற இதுவே சரியான நேரம்” என்றார். இப்படி இரு பாஜக தலைவர்கள் பெயர் மாற்றம் குறித்துக் கூறிய கருத்துகள் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இதற்கு அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் சாந்தனு சென் கூறுகையில், “எதிர்க்கட்சிகள் அனைவரும் இப்போது இந்தியக் கூட்டணிக்குக் கீழ் வந்துள்ளோம். இதைப் பார்த்து பாஜக பயந்துவிட்டது.

இதனால் உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப பாஜக முயல்கிறது. இதன் காரணமாகவே அவர்கள் இப்படிப் பேசி வருகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டினார். அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இப்போது 25+ எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டுள்ளனர்.

காங்கிரஸ், திரிணாமுல் என பல்வேறு கட்சிகளும் ஒரே அணியில் வந்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு “இந்தியா” எனப் பெயரிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் கூட பிரதமர் மோடி உரையாற்றும் போது, “இந்தியா” என்றே எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர்.

இந்தச் சூழலில் தான் வரும் செப். 18 முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டுகிறது. இதில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கான மசோதா முன்மொழியப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. “இந்தியா” கூட்டணியைக் கண்டு அஞ்சியே பாஜக இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

38 minutes ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

40 minutes ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

59 minutes ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

2 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

2 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

3 hours ago

This website uses cookies.