சித்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் சிசு கடத்தப்பட்ட விவகாரம் : குழந்தையை மீட்டு இரு பெண்களை கைது செய்த போலீசார்!!

ஆந்திரா : சித்தூர் அரசு மருத்துவமனையில் மாயமான பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய 2 பெண்களை கைது செய்த குண்டூர் போலீசார் அவர்களிடம் இருந்து அந்த ஆண் குழந்தையை மீட்டனர்.

சித்தூர் அரசு மருத்துவமனையில் மங்க சமுத்திரத்தை சேர்ந்த சபானா என்ற பெண்ணுக்கு இம்மாதம்14 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை எடை மிகவும் குறைவாக இருந்ததால் அதை அவசர சிகிச்சை வார்டில் வைத்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் 19 ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் அந்த குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சி அடிப்படையில் குழந்தையை கடத்தி அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பெண்கள் அந்த ஆண் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. செல்போன் நடமாட்டம் அடிப்படையில் அந்தப் பெண்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவர் குண்டூர் நோக்கி பேருந்து சென்று கொண்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதுபற்றி சித்தூர் போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் குண்டூர் போலீசார் அந்த இரண்டு பெண்களும் பேருந்திலிருந்து இறங்கும்போது காத்திருந்து அவர்களை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களிடமும் விசாரணை நடத்தி வரும் குண்டூர் போலீசார் அவர்களை சித்தூர் போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

14 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

15 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

15 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

16 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

17 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

18 hours ago

This website uses cookies.