தெலுங்கானா : மர்மமான முறையில் காணாமல் போன தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து கொடுக்காவிட்டால் 48 மணி நேரத்திற்குள் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறி பாதிக்கப்பட்ட கணவர் ஒருவர் பதிவு செய்துள்ள செல்பி வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டோரிஷெட்டி சத்தியமூர்த்தி. அவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், 14, 16 ஆகிய வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ளார். இவருடைய மனைவி அன்னபூரணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளியே சென்று பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, சத்தியமூர்த்தி காவல் நிலையத்தில் என்னுடைய மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுவரை அவரை கண்டுபிடித்து தரவில்லை. இதனால், மனம் வேதனை அடைந்த கணவன் சத்தியமூர்த்தி, தனது குழந்தைகளுடன் இன்று ஒரு செல்பி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், தனது மனைவியை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும். தனது மனைவி வைத்திருந்த செல்போனின் சிக்னல் மூலமாகவோ அல்லது சிசிடிவி காட்சிகள் மூலமாகவோ உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள போவதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.