கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய பேரணியில், மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறுவன் ஒருவன் கோஷமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், சிறுவன் ஒருவனும் பங்கேற்று இருந்தான். அந்த சிறுவன் ஒருவரின் தோள்பட்டையின் மீது அமர்ந்தவாறு, கோஷம் எழுப்ப, அதனை கூட்டத்தில் இருந்தவர்கள் பின்தொடர்ந்து முழங்கினர்.
அப்போது, இந்து, கிறிஸ்துவ மதங்களுக்கு எதிராக அந்த சிறுவன் முழக்கமிட்டிருந்தான். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தாலும், இந்த வீடியோ அண்மையில் டிரெண்டாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் உள்பட பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதோடு, சிறுவனை தூண்டி விட்டு பேசியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அரசியல் கூட்டத்தில் மைனர் சிறுவன் கோஷங்களை எழுப்பிய விவகாரத்தில், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சிறுவனை கூட்டத்திற்கு அழைத்துச் சென்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆலப்புழா மாவட்ட தலைவர் நவாஸ் வந்தனம் மற்றும் செயலாளர் முஜீப் என இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, அரசியல் மற்றும் கலாச்சாரக் கூட்டங்களில் சிறுவர்களை அழைத்துச் சென்று, இதுபோன்று மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்ட சம்பவம் வேதனை அளிப்பதாக கேரள உயர்நிதமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், வளர்ந்து வரும் தலைமுறையினர் மனதில் மதங்களுக்கு எதிரான கருத்துக்களை விதைப்பதாகவும், இந்த குழந்தை வளர்ந்து மேஜர் ஆகும் போது, இவன் மனதில் ஏற்கனவே மதங்களுக்கு எதிரான கருத்துக்களே நிரம்பி இருப்பதாகவும் நீதிபதி கோபிநாத் கூறியிருந்தார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.