15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து வாயில் ஆசிட் ஊற்றி சித்ரவதை செய்த சம்பவம் தலைநகர் டெல்லியை உலுக்கியுள்ளது.
டெல்லியில் செருப்பு தொழிற்சாலையின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெய் பிரகாஷ் (31). இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை கவனித்துக கொள்ள வருமாறு, தான் பணியாற்றி வந்த தொழிற்சாலையில் வேலை செய்து வரும் 15 வயது சிறுமியிடம் கேட்டுள்ளார். அவரும், இரக்க குணத்துடன் அதனை ஏற்று அவரின் வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் சிறுமியை தனது வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மேலளார் ஜெய் பிரகாஷ். இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு, வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை நிறுத்திய பிரகாஷ், அவளின் வாயில் கட்டாயப்படுத்தி ஆசிட் ஊற்றி சித்ரவதை செய்துள்ளார். இதனால், சிறுமி வீட்டிற்கு வந்த நிலையில் மயக்கமடைந்தாள். உடனடியாக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் பிரகாஷை கைது செய்தனர். பிரகாஷ் மீது நங்லோய் காவல் நிலையத்தில் கற்பழிப்புக்கான போக்சோ சட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.