கர்நாடகாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று எரித்த கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு உட்பட்ட ராம்நகர் மின்மயானத்துக்கு ஒரு ஆணும், பெண்ணும் 2 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையை நள்ளிரவு கொண்டு வந்து எரித்துள்ளனர். பின்னர், அடுத்த 15 நாட்களுக்குள் மீண்டும் அதே ஒரு ஆணும், பெண்ணும் 11 மாத குழந்தையைக் கொண்டு வந்து எரித்துள்ளனர். எனவே, இது அங்கிருந்த காவலாளிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர் அவர்களிடம் விசாரித்துள்ளார்.
அப்போது, இரண்டு குழந்தைகளும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர். அப்படியானால், மற்ற உறவினர்கள் எங்கே எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்க, அவர்களை தடுத்து அங்கேயே நிறுத்தியுள்ளார். பின்னர், இது குறித்து போலீசாருக்கு காவலாளி தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, மின்மயானத்திற்கு வந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். அதில், அவர்களில் 24 வயதான பெண் ஸ்வீட்டி என்பதும், மற்றொரு ஆண் 27 வயதான கிரகோரி பிரான்சிஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பிரான்சிஸ் கள்ளக்காதலர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: ‘நான்’ பட பாணியில் தாய் செய்த சம்பவம்.. மகன் கொடூர கொலை!
அது மட்டுமல்லாமல், கள்ளக்காதலன் உடன் இருக்க விரும்பிய ஸ்வீட்டி, கெம்பேகவுடா சதுக்கம் அருகில் உள்ள மஞ்சுநாத நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்துள்ளார். இவர்கள்து உல்லாச உலகிற்கு முதலில் 2 வயது மகள் கபிலா இருந்ததால் அவரை அடித்துக் கொன்று மின்மயானத்தில் எரித்துள்ளனர். பின்னர், உல்லாசமாக இருந்தபோது 11 மாத கைக்குழந்தை கபிலன் அழுததால், அவரையும் கொன்று சுடுகாட்டில் எரித்தபோது தான் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது.
முக்கியமாக, இரு குழந்தைகளின் உடம்பிலும் காயம் இருந்ததே மின்மயான காவலாளிக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதனிடையே, தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணவில்லை என ஸ்வீட்டியின் கணவர் டி.ஜே.ஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்துள்ளார்.
முன்னதாக, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தனது இரு குழந்தைகளையும் கொன்ற குன்றத்தூர் அபிராமியின் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை விவரங்கள் வழங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.