ஹோலி கொண்டாட்டத்தின் போது குளத்தில் குளித்த புதுமண தம்பதி உள்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரட்டிலம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், தனது கணவருடன் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினார். பின்னர், அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் அந்தப் பெண் குளிக்க சென்றார். அவர்களோடு, அந்தப் பெண்ணின் சகோதரர் (13) மற்றும் சகோதரியும் (10) உடன் சென்றனர்.
அப்போது, இளம்பெண் குளத்தில் இறங்கி குளிக்கும் போது, ஆழமான இடத்திற்கு சென்றுவிட்டார். இதனால் அவர் நீரில் தத்தளித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் சகோதரி இருவரும் அடுத்தடுத்து குளத்தில் குதித்து அக்காவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாததால் அவர்களும் உயிருக்கு போராடினர்.
மனைவி மற்றும் அவரின் சகோதரர், சகோதரி தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட அந்தப் பெண்ணின் கணவரும் தண்ணீரில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். உயிரிழந்த தம்பதிக்கு 2 வாரங்கள் முன்புதான் திருமணம் நடந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.