நாடாளுமன்றத்தில் கடுகடுத்த நிர்மலா சீதாராமன்… வெளிநடப்பு செய்த திமுக : டிவியில் போய் பாருங்கள்.. ஆவேசப் பேச்சு!!!
மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடுதலாக மொத்தம் 900 படுக்கைகள்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தமிழ்நாடு அரசுக்குக் கடன் சுமையே இல்லை.. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2022 முதல் படித்து வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977 கோடி ரூபாய் நிதி.. ரூ 1627 கோடி கடனுதவியுடன் மத்திய அரசு கட்டுகிறது.. கடன் வாங்கி கட்டுகிறோமா இல்லை நிதி ஒதுக்குகிறோமா என்பது எங்கள் விருப்பம். அது எங்களுடைய கொள்கை சார்ந்த முடிவு.. தம்ழிநாடு அரசுக்கு எந்த கடனும் இல்லை; நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஆக தமிழக அரசே காரணம்.
எனவே, மதுரை எய்மஸ் கட்டுமான தாமதத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது. அதனால் தயவு செய்து மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான தகவலைப் பரப்ப வேண்டாம். பொதுவாக 700 படுக்கைகள்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கின்றன;
ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன. இவை தொற்று நோய் பரவல் ஏற்படும் போது பெரியளவில் உதவியாக இருக்கும்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 99 மாணவர்கள் இப்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்கள்” என்றார். அப்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
குறிப்பாக நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் நிதி ஒதுக்கீடு குறித்துப் பேசுகையில் திமுக எம்பிக்கள் வெட்கம்! வெட்கம்! எப்போது? எப்போது? என முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.
அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாடு குறித்துப் பேச நிறைய இருக்கிறது. நான் சொல்கிறேன் டிவியில் சென்று பாருங்கள்” என்று ஆக்ரோஷமாகப் பதில் அளித்தார்.
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
This website uses cookies.