புதுடெல்லி: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச செவிலியர் தினம் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. செவிலியர்களின் முன்னோடியாக விளங்குபவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.
கைவிளக்கு ஏந்திய காரிகை என்று போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பும் கருணையும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.
சர்வதேச செவிலியர் தினமானது, அனைத்து செவிலியர் ஊழியர்களுக்கும் நமது பாராட்டுக்களை மீண்டும் வலியுறுத்தும் நாள். மிகவும் சவாலான சூழ்நிலையிலும், செவிலியர்களின் சிறப்பான பணிக்காக அனைத்து செவிலியர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.