விரட்டி விரட்டி வரட்டியால் அடி : ஒருவர் மீது ஒருவர் வரட்டியால் தாக்கிக் கொள்ளும் வினோத திருவிழா.. களைகட்டிய விசித்திர கொண்டாட்டம்!!

ஆந்திரா : கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் பக்தர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் வறட்டியால் தாக்கி கொள்ளும் வினோத திருவிழா இன்று நடைபெற்றது.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அஸ்பாரி மண்டலத்தில் உள்ள கைருப்பாலா கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி மறுநாள் ‘பிடக்க’ (வரட்டி) திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கைருப்பாலா கிராமத்தில் புராணகாலத்தில் வசித்து வந்த பத்ரகாளி, வீரபத்ர சுவாமி ஆகியோர் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். அந்த காதலை ஏற்க மறுத்த இரண்டு பேரின் பெற்றோர்கள் காதலர்களை பிரித்து விட்டனர்..

இதனால் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறு ஆக மாறியது. பின்னர் இரு தரப்பினரும் சமாதானம் அடைந்து இரண்டு பேருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வீரபத்திர சுவாமி, பத்திரகாளி ஆகியோர் வசித்து வந்த கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் கைருப்பாலா கிராமவாசிகள் யுகாதி மறு நாள் அன்று ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சாணத்தால் தயார் செய்யப்பட்ட வரட்டியை அங்கு உள்ள கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு சமர்ப்பிப்பனர்.

வறட்டி திருவிழாவை முன்னிட்டு இன்று சமர்ப்பிக்கப்பட்ட வறட்டிகளை கிராமவாசிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கையில் எடுத்துக் கொண்டனர். பின்னர் ஒரு குழுவினர் மீது மற்றொரு குழுவினர் வறட்டியால் தாக்கிக் கொண்டனர். இந்த பக்தி தாக்குதலில் சிலர் லேசான காயம் அடைந்தனார்.

அந்த காயங்களுக்கு கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் மருந்தாக பூசப் பட்டது. பின்னர் வீரபத்ரசாமி, பத்திரகாளி ஆகிய தெய்வங்களுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.