இன்று நாடாளுமன்றம் கூடியதும், நேற்றைய சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இரு இளைஞர்கள், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது. எம்பிக்களின் இருக்கைகள் மீது ஏறி குதித்து கூச்சலிட்ட இருவரையும் அவை காவலர்கள் மடக்கி பிடித்தனர். 2 மர்மநபர்கள் அத்துமீறி நுழைந்ததால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, நாடாளுமன்றத்திற்குள் புகுந்த சம்பவம் தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த நீலம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனமோல் ஷிண்டே மற்றும் சாஹர் என்பவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மைசூரைச் சேர்ந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, இவர்களை பார்வையாளர்களாக அனுமதிக்கக்கோரிய பரிந்துரை கடிதம் கிடைத்தது.
நாடாளுமன்றத்திற்குள் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்ததை தொடர்ந்து மக்களவை ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். மேலும், நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் இன்று மாலை ஆலோசனை நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடியதும், நேற்றைய சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.
நேற்றைய சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகக் கூறியுள்ள எதிர்கட்சிகள், உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.