PM Modi பதறுகிறார்.. கண்ணீர் விட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : ராகுல் காந்தி தாக்கு!

PM Modi பதறுகிறார்.. கண்ணீர் விட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : ராகுல் காந்தி தாக்கு!

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

அதே சமயம் தேர்தலை முன்னிட்டு பாஜகவும், காங்கிரஸும் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில நாட்களாக பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

இதில் குறிப்பாக காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கு ராகுல் காந்தியும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடகாவின் பிஜப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, பாஜக அரசு ஒரு சிலரை கோடீஸ்வரர்களாக்கும். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும்.
உண்மையான பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்பி வருகிறார்.

மேலும் படிக்க: மூட்டை சுமக்கும் முன்னாள் அமைச்சர்.. இணையத்தில் தீயாய் பரவும் VIDEO : முழு விபரம்.!!

அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே உங்களுக்கு உரிமைகளும், குரல்களும், இடஒதுக்கீடுகளும் கிடைத்துள்ளன. ஆனால், பிரதமர் மோடி இதை உங்களிடமிருந்து பறிக்க விரும்புகிறார்.

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து உள்ளதாகவும், 70 கோடி மக்களிடம் இருக்கவேண்டிய செல்வம் 22 பேரிடம் உள்ளது எனவும் குற்றசாட்டியுள்ளார்.

இதுபோன்று, நாட்டின் 40 சதவீத செல்வத்தை ஒரு சதவீத மக்கள் மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
மேலும், வறுமை, பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளில் குறித்து மோடி வாயை திறப்பது இல்லை.

இந்தப் பிரச்னைகளை தீர்க்க காங்கிரஸால் மட்டுமே முடியும். எனவே, முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி பீதியில் உள்ளனர்.

பிரதமர் பதற்றத்தில் இருப்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. இதனால் கூடிய விரைவில் பிரதமர் மோடி கண்ணீர் சிந்துவார் எனவும் விமர்சித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.