மின்வெட்டு காரணமாக மணப்பெண்களை மாற்றி மணமகன்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தற்போது மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் மின்தடையால் மணப்பெண்களை மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
உஜ்ஜைனி நகரைச் சேர்ந்த ரமேஷ் லால் என்பவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தந்தை ரமேஷ், வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த கணேஷ், தங்க்வாரா ஆகிய இரு மணமகன்களை தனது மகள்களுக்கு வரன் பார்த்துள்ளார்.
அதன்படி, இரு பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அப்போது, அக்னியை சுற்றி வலம் வந்த மணமகள்கள் இருவரும் இடம் மாறி மாறி அமர்ந்தனர். இருவரும் தலைக்கு முக்காடு போட்டிருந்ததாலும், ஒரே மாதிரியான ஆடை அணிந்திருந்ததாலும் மாப்பிள்ளைகளுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் அடையாளம் தெரியவில்லை.
திருமணம் முடிந்து இரு பெண்களும் தங்களது கணவன் வீட்டிற்கு சென்ற பிறகுதான் தாங்கள் போட்டிருந்த முக்காடை அகற்றினர். அப்போது, மணப்பெண் மாறியிருப்பதை கண்டு இரு மணமகன் வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மணமகன் குடும்பத்தினர் சண்டை போட்ட பிறகு, திருமணம் நடத்தி வைத்த புரோகிதரிடம் முறையிட்டனர்.
பின்னர், அவரது அறிவுறுத்தலின் பேரில், மீண்டும் சடங்கு செய்து, தங்களது மனைவியை மீண்டும் அவரவர் கணவர்கள் கரம் பிடித்தனர். மின்தடையால் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.