ஆந்திரா கர்நாடக எல்லையில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
தனியார் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று பாவகட்டா நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் அதிக அளவில் பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
தும்கூர் மாவட்டத்தில் உள்ள பலவலஹள்ளி அருகே அந்த பேருந்து சாலையில் திடீரென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் உடல் நசுங்கி மரணமடைந்தனர்.மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
மரணமடைந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.