அமலாக்கத்துறை பிடியில் பிரியங்கா காந்தி… குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற பெயர் : பாஜக போட்ட ஸ்கெட்ச்!!!

அமலாக்கத்துறை பிடியில் பிரியங்கா காந்தி… குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற பெயர் : பாஜக போட்ட ஸ்கெட்ச்!!!

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பதவி வகித்து வருபவர் பிரியங்கா காந்தி. இவர் அரியானா மாநிலத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி விற்பனை செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்து இருக்கும் குற்றப் பத்திரிகையில் முதன்முறையாக இவரது பெயரும் இடம்பெற்று உள்ளது.

அவரது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேராவின் பெயரும் இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால், குற்றம்சாட்டப்படும் நபர்களின் பட்டியலில் அவர் இல்லை.

வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் சி.சி. தம்பி மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் குடிமகனான சுமித் சாத்தா ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் தலைமறைவாக இருக்கும் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியின் குற்றச்செயல்களை மறைக்க உதவி செய்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அமிபுர் கிராமத்தில் பிரியங்கா காந்தியின் பெயரில் வாங்கப்பட்ட வீட்டை, டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான பாவாவிடம் விற்பனை செய்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

இதே முகவரிடம்தான் அமிபுர் கிராமத்தில் கடந்த 2005 முதல் 2006 ஆண்டுகளுக்கு இடையே 40.8 ஏக்கர் நிலத்தை ராபர்ட் வதேரா வாங்கியதாகவும், அதை டிசம்பர் 2010 ஆம் ஆண்டு அவரிடமே விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்ற ஒப்பந்த முறையை 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த தொழிலதிபர் சி.சி.தம்பி, 486 ஏக்கர் நிலத்தை வாங்கி விற்கும்போதும் பயன்படுத்தியுள்ளாராம். இந்த தொழிலதிபருக்கும் ராபர்ட் வதேராவுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கூறி உள்ளது.

ராபர்ட் வதேரா இதற்கு முன்பும் பல்வேறு வழக்குகளில் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். அதில் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து உள்ளார்.

ஆனால் இந்த வழக்கில் அவரது பெயர் இடம்பெறுவது இதுவே முதல் முறை. அமலாக்கத்துறை மத்திய அரசின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக செயல்படுவதாக அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பிரியங்கா காந்தி மீதான குற்றப் பத்திரிகை தேசிய அரசியல் புயலை கிளப்பி இருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை தொடர்பாக பிரியங்கா காந்தி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…

19 minutes ago

‘கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி? கணவருடன் மனக்கசப்பு?!

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…

39 minutes ago

கங்குவா வசூலை கூட தாண்டாத ரெட்ரோ… சூர்யாவுக்கு வந்த சோதனை!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…

52 minutes ago

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

This website uses cookies.