பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார்.
117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான், ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையேற்று அவரும் அழைப்பு விடுத்தார்.
அதன்பேரில், சுதந்திர போராட்டத் தியாகியான பகத்சிங்கின் கிராமமான கத்கர் கலனில் இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்காக 100 ஏக்கர் பரப்பளவில் விழா அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். அவருடன் 16 அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர்.
பதவியேற்பு விழாவில் ஆம்ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப்பின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.