கனடாவில் சமீப காலமாக இனவாத வெறுப்பு தாக்குதல் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெறுப்பு தாக்குதல்கள், பிரிவினைவாத வன்முறைகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் கனடாவில் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
தூதரகம் வாயிலாக கனடாவிற்கு இந்த குற்றங்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டும், இதுவரை குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
அதிகரிக்கும் குற்றங்களை கருத்தில் கொண்டு, இந்திய மக்களும், மாணவர்களும் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு செல்லும்போது, கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஏற்கனவே அங்கு வாழும் இந்திய மாணவர்களும் விழிப்புடன் இருப்பது அவசியம். அங்குள்ள இந்தியர்கள் ஒட்டாவா, டொரான்டோ, வான்கூவர் நகரங்களில் உள்ள தூதரகங்களில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அப்போதுதான் ஏதேனும் அவசரநிலை ஏற்படும் போது, உங்களை தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.