ரயில்நிலையத்தின் விளம்பர திரையில் திடீரென ஆபாசப் படம் ஓடியதை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
பாட்னா நகரில் அமைந்துள்ள பாட்னா ரயில்நிலையத்தை பயன்படுத்தி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். எப்போதும், பரபரப்பாக காணப்படும் இந்த ரயில்நிலையத்தில் வழக்கம் போல நேற்றிரவு ஆண்கள், பெண்கள் என குடும்பத்தோடு ஏராளமான பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர்.
இரவு 9.30 மணியளவில் ரயில்நிலையத்தில் இருந்த டிஜிட்டல் விளம்பரப் பலகையின் திரையில் திடீரென ஆபாச வீடியோ ஓடியது. படத்தில் இடம்பெற்ற சத்தமும் அங்கிருந்த ஒலிப்பெருக்கியில் கேட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த திரையை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டனர். இதனால், ரயில்நிலையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இதனை அறிந்த ரயில்வே நிர்வாகம், உடனடியாக திரை அணைத்தது. இதன்பின், விளம்பர ஒப்பந்ததாரர் நிறுவனம் மீது பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மர்ம நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டு இதுபோன்று நடந்ததா..? என்று கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.