ராஜஸ்தானில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதாப்கார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருடன் அந்தப் பெண்ணுக்கு தகாத உறவு இருப்பதாக அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், இருவருக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. மேலும், மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
உச்சகட்ட கொடுமையாக, அந்தப் பெண்ணின் ஆடைகளை களைந்து, நிர்வாண கோலத்தில் கிராமத்தில் ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர். இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்ட X தள பதிவில், “ஒரு நாகரீக சமூகத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடம் கிடையாது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்,” என தெரிவித்துள்ளார். இதனிடையே, போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து, 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.